Tuesday, January 13, 2009

தாய்மை

சில தினத்திற்கு முன் டைப்ஹைட் வந்து மூணு நாள் ட்ரிப் எத்தனும்னு டாக்டர் சொல்லிட்டார்.. டெய்லி காலை, மாலை ஆஸ்பிடல் போய் ட்ரிப் எத்தி கிட்டு இருந்தேன்..

டிசம்பர் 24 காலை ஒரு 10 மணிக்கு வழக்கம் போல ட்ரிப் எத்த போய் இருந்தேன்..
எனக்கு ரெண்டு பாட்டில் எத்தனும்.. மூணு நாலா ஒரே கைல எத்துறதால, வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. எப்பிடியோ, கஷ்டப்பட்டு போட்டு முடிச்சுடலாம்னு நான் ட்ரிப் ஏத்திகிட்டு இருந்தேன்..

எனக்கு இன்னொரு சைடுல ஒரு வயசான பாட்டி, ஒடம்பு சரி எல்லாம அட்மிட் ஆகி அவங்களும் ட்ரிப் ஏத்திகிட்டு இருந்தாங்க..

அப்போ தான், ஒரு பொண்ணோட அழு குரல்... கூடவே ரெண்டு மூணு டாக்டர், ரெண்டு நர்ஸ், ஆபரேஷன் முடிஞ்சு கூட்டி கிட்டு வந்தாங்க..
அவங்களுக்கு நான் இருந்த பெட் குடுத்துட்டு, வேற ஒரு பெட்ல போய் நான் படுத்துகிட்டேன்.. ஏன்ன அங்க ரொம்ப நெருக்கமா பெட் போட்டு இருந்தனால, அவங்க ஸ்ட்ரெச்சர் போக முடியல..

அந்த பொண்ணு லேசான முனு முனுப்பு ஓட அழுதுகிட்டே, இருந்தாங்க..
"என்ன எதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்"..
"என்ன எதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்"..
"நான் என் இங்க வாழனும்"..
"நான் செத்தா கூட பரவா இல்ல, எனக்கு குழந்தை மட்டும் பொறந்த போதும்"..
"நான் செத்தா கூட பரவா இல்ல, எனக்கு குழந்தை மட்டும் நல்ல படிய பொறந்த போதும்"..
"அம்மா நான் என்னமா பாவம் பண்ணேன் எனக்கு மட்டும் எப்பிடி ஆச்சே"...
"அம்மா நான் செத்து போறேன்மா"..."அம்மா நான் செத்து போறேன்மா"...
"இத்தோட மூணு போச்சே.. நான் என்ன பண்ணுவேன்"..
"என்ன கொன்னுடுங்க..நான் சாகுறேன்"..

இப்பிடி அவங்க அழ அழ, எனக்கே தெரியாம, கண்ணுல தண்ணி..
கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன்.. "கடவுளே!!! இவங்களுக்கு தைரியமும் நல்ல குழந்தையும் கொடு.." ஒரு ரெண்டு மூணு நாளைக்கு எனக்கு சரியா எதுவும் பண்ண முடியல.. என்ன ரொம்ப பாதிச்ச விசயங்கள இதுவும் ஒன்னு..
அப்போ தான், ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது எவ்வளவு முக்கியமான ஒண்ணுனு.. பீல் பண்ண முடிஞ்சது....

ஒரு குழந்தை பெற்றால் தான் தாய்மை என்ற தகுதி பெற முடியும்.. தாய்மை அடைந்தால் தான் பெண்மை முழுமை அடையும்.. இப்பிடி எல்லாம் bookla படிக்கும் பொது ஒன்னும் தெரியாது.. இந்த மாதிரீ யாராவது கஷ்ட படுவதை நேரில் பார்க்கும் பொது, மனசுல ஒரு வலி...

இப்போ எல்லாம், எனக்கு குழந்தை பெற போகும் பெண்ணை/தாய்மையை பார்க்கும் பொது மரியாதையும் அன்பும், அவர்களுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்னு வேண்டுதலும்.. தானாக வந்து விட்டது..

No comments: